சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 862

பொதுப் பெண்டிரின் மயக்கம்..

News image
Updated On :23 ஜூன் 2018, 6:30 pm

‘பொதுப் பெண்டிரின் மயக்கம் அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் வீரை நகருக்கு உரியது.  வீரை நகர் என்பது திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத்தலம்.  இப்பாடல் பழநித் திருப்புகழ்ப் பாடல்களின் வரிசையில் வருகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானா தனதன தானா தனதன

                தானா தனதன                                                            தனதான

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி

                        யாலே யமுதெனு                                            மொழியாலே

                ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை

                        யாலே மணமலி                                               குழலாலே

சூதா ரிளமுலை யாலே யழகிய

                        தோடா ரிரு குழை                                            யதனாலே

                சோரா மயல்தரு மானா ருறவிடர்

                        சூழா வகையருள்                                             புரிவாயே

போதா ரிருகழல் சூழா ததுதொழில்

                        பூணா தெதிருற                                                  மதியாதே

                போரா டியஅதி சூரா பொறுபொறு

                        போகா தெனஅடு                                              திறலோனே

வேதா வுடனொடு மாலா னவனறி

                        யாதா ரருளிய                                                     குமரேசா

                வீரா புரிவரு கோவே பழநியுள்

                        வேலா இமையவர்                                         பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.