சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

‘எப்போதும் உனது அடியார் திருக்கூட்டத்துடன் சேர்ந்திருக்க வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் சிதம்பரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடில், ஒரு குறில் என இரண்டெழுத்துகளையும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களும் நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களும் ஒரு நெடில் இரண்டு குறில் என மூன்றெழுத்துகளையும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்கள் இரண்டு குறில் ஒரு நெடில் என மூன்றெழுத்துகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

தான தானன  தனனா தானன

                தான தானன  தனனா தானன

                தான தானன  தனனா தானன                                        தனதான

தாது மாமலர் முடியா லேபத

                        றாத நூபுர அடியா லேகர  

                         தாள மாகிய நொடியா லேமடி                               பிடியாலே

      சாடை பேசிய வகையா லேமிகு

                        வாடை பூசிய நகையா லேபல

                        தாறு மாறுசொல் மிகையா லேயன                  நடையாலே

மோதி மீறிய முலையா லேமுலை

                        மீதி லேறிய கலையா லேவெகு

                        மோடி நாணய விலையா லேமயல்                  தருமானார்

      மோக வாரிதி தனிலே நாடொறு

                        மூழ்கு வேனுன தடியா ராகிய

                        மோன ஞானிக ளுடனே சேரவு                             மருள்வாயே

காத லாயருள் புரிவாய் நான்மறை

                        மூல மேயென வுடனே மாகரி

                        காண நேர்வரு திருமால் நாரணன்                     மருகோனே

      காதல் மாதவர் வலமே சூழ்சபை

                        நாத னார்தம திடமே வாழ்சிவ

                        காம நாயகி தருபா லாபுலி                                        சையில்வாழ்வே

வேத நூன்முறை வழுவா மேதினம்

                        வேள்வி யாலெழில் புனைமூ வாயிர

                        மேன்மை வேதியர் மிகவே பூசனை                  புரிகோவே

      வீறு சேர்வரை யரசாய் மேவிய

                        மேரு மால்வரை யெனநீள் கோபுர

                        மேலை வாயிலின் மயில்மீ தேறிய                 பெருமாளே.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.