சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பகுதி - 866

அன்பர் திருக் கூட்டத்தோடு..

News image
Updated On :27 ஜூன் 2018, 6:30 pm

‘அன்பர் திருக்கூட்டத்தோடு சேர்ந்திருக்கின்ற பேற்றை அருளி நற்கதியைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் மதுரைக்கானது.

வழக்கத்தைவிட நீளமான தொங்கல் சீரை உடைய இந்தப் பாடலில் ஓரடிக்கு ஒற்றொழித்து 50 எழுத்துகள் உள்ளன.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு—ஏழு, எட்டு—பதினொன்று, பன்னிரண்டு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; தொங்கல் சீரின் முன்பாதியில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; பின்பாதியில் வழக்கம்போல மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக அமைந்துள்ளன.

தனத்த தாத்தன தனதன தனதன

                தனத்த தாத்தன தனதன தனதன

                தனத்த தாத்தன தனதன தனதன                                தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை

                        ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்

                        பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்             அளவளப்  பதனாலே

      படுக்கை வீட்டினு ளவுஷத முதவுவர்

                        அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்

                        பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென     அவரவர்க் குறவாயே

அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை

                        முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்

         அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு     நரகினிற் சுழல்வேனோ

      அவத்த மாய்ச்சில படிகுழி தனில்விழும்

                        விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை

         அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து             கதிதனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள

                        குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு

         தகப்ப னார்க்கொரு செவிதனி லுறைசெய்த               முருகவித் தகவேளே

      சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்

                        திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து

                        சயத்த யோத்தியில் வருபவ னரி               திருமருகப் பரிவோனே

செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது

                        பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி

            செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை                          மணமதுற் றிடுவோனே

      திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்

                        கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு

             திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும்                அறுமுகப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.