சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(01.08.2004)சர்க்கஸில் இருந்து தப்பிய புலியால் ஏற்பட்ட கிலி

சர்க்கஸில் இருந்து தப்பித்த வெள்ளைப் புலி, நகர்ப்புறத்தில் அமைதியாக வலம் வந்தது. ஆனால், அதைக் கண்ட மக்களுக்குத்தான் கிலி ஏற்பட்டது.

News image
Updated On :30 ஜூலை 2015, 10:38 am

சர்க்கஸில் இருந்து தப்பித்த வெள்ளைப் புலி, நகர்ப்புறத்தில் அமைதியாக வலம் வந்தது. ஆனால், அதைக் கண்ட மக்களுக்குத்தான் கிலி ஏற்பட்டது.

நியூயார்க் நகரில், விடுமுறையைக் கழிக்க அருகாமையில் உள்ள ஒரு தேவாலயத்தை ஒட்டி அமைந்துள்ள பூங்காவுக்கு வந்திருந்தவர்களைப் போல் புலியும் பூங்காவின் ஒரு பகுதியில் வலம் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்தவர்களுக்குத்தான் கிலி ஏற்பட்டது.

அந்தப் புலி சுமார் ஒரு கிலோ மீட்டர் நகரச் சாலையில் உலா வந்தது. அதைக் கண்ட கிலியில் பல கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயமடைந்தனர்.

ஒரு தெருவுக்குள் புகுந்த அந்தப் புலி, அமைதியாகப் படுத்தது. தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து புலியை சுற்றி வளைத்தனர். கைதேர்ந்த புலிகள் பயிற்சியாளரால் புலி கூண்டில் அடைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.