இந்த நாளில் அன்று
(08.03.1960)
பத்மினிக்கு விமான நிலைய வாசம் - கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு
காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்குச் செல்லத்தக்க அத்தாட்சி வைத்திராததால், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பத்மினிக்கு இன்று கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
எகிப்திய கலாசார இலாகாவின் அழைப்பின் பேரில் ஆப்பிரிக்கா - ஆசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக பத்மினி, கெய்ரோ போயிருப்பது நினைவிருக்கலாம். அவருடன் சகோதரி ராகினியும் அவரது தாயாரும் போயிருக்கிறார்கள்.
அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மார்ச் 11-ம் தேதியன்று நீக்கப்படும். திரைப்பட இறுதி விழாவில் மார்ச் 12-ம் தேதி அவருடைய நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது.
விமான நிலைய விருந்தாளி அறையில் பத்மினியுடன் அவர் தாயாரும், தங்கையும் துணை இருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


