நவம்பர் 16 - உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை  உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது
நவம்பர் 16 - உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினம்!
Updated on
1 min read

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை  உலக நெடுங்கால சுவாச அடைப்பு நோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (அ) நெடுங்கால சுவாச அடைப்பு நோய் (Chronic obstructive pulmonary disease; COPD; சிஓபிடி) என்பது நுரையீரல் இயக்கத்திற்கு இடையூறு செய்கின்ற ஒரு நோய் ஆகும்.

இந்த நோயின் காரணமாக நுரையீரலுக்குச் செல்லும் மற்றும் நுரையீரலில் இருந்து வெளிச்செல்லும் காற்றின் அளவு மட்டுப்படுத்தப்படுகின்றது, இந்நிலையில் குறுகிய சுவாசம் அல்லது சுவாசப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்த நோயின் காரண்மாக சுவாச அடைப்பு நோயில் மாற்றங்கள் முன்னேற்றம் இல்லாமல், நாளுக்கு நாளாக இன்னும் மோசமான நிலைக்குட்படுகின்றது.

1990 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, உலகெங்கும் மரணம் ஏற்படுவதற்கான காரணங்களில் சிஓபிடி ஆறாவது இடத்தை வகித்தது. உலக அளவில் சிஓபிடி 329 மில்லியன் நபர்களை பாதித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு இந்த நோய் உலக அளவில் மக்கள் இறப்பிற்கான மூன்றாவது முக்கிய காரணமாக இருந்தது, கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com