பிளஸ் 2 வகுப்பில் சேரும்போதே என்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவோடுதான் வகுப்பில் காலடி எடுத்து வைக்கின்றனர் பெரும்பாலான மாணவர்கள்.
தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் நல்லதோ, கெட்டதோ; நெட்டையோ குட்டையோ ஏதாவது ஒரு என்ஜினியரிங் கல்லூரியை நோக்கி ஓடுகின்றனர். அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கொடுத்து முட்டி, மோதி தேர்ச்சி பெறுகின்றனர். ஆனால் பொறியாளர்களுக்கு அவ்வளவு எளிதில் வேலை கிடைத்துவிடுவதில்லை என்பது அதன் பிறகுதான் தெரிகிறது.
பி.இ. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் தொடர் கதையாகி வருகின்றன.
பிளஸ் 2 தேர்வில் 900-க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்களிடம் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்து, பன்னாட்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே நிலை கொண்டுள்ளது.
இதனால் தரமில்லா கல்லூரிகளிலும் லட்சம் லட்சமாய் பணத்தைக் கொட்டி பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருகின்றனர்.
பி.எஸ்சி., பி.காம். போன்ற பட்டப் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் காளான்களைப் போல் ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துவிட்டன. ஆண்டுக்கு 50 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்கப்பட்டு வருகிறது.
இப்போது ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், படிப்பு முடித்து வெளிவந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இவர்களில் 40 சதவீதத்தினருக்கு மேல் வேலை இல்லை என்பதை, அறிவுறுத்த ஒருவரும் முன்வருவதில்லை.
இதை மறைத்து விட்டு பொறியியல் படிப்புதான் எல்லாமே என்பது போன்ற மாயையை தனியார் கல்லூரிகள் உருவாக்கி வருகின்றன என்கிறார் "மா ஃபா' மனிதவள மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் கே. பாண்டியராஜன்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது:
பி.ஏ., பி.எஸ்சி., பி.காம். உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படித்தவர்களுக்கு இப்போது வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. தனியார் வங்கிகள், பி.பி.ஓ. சென்டர்கள்,
மார்க்கெட்டிங், விஷுவல் மீடியா என ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆரம்ப
சம்பளமே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை இவர்களுக்கு கிடைக்கிறது.
ஆனால், பி.இ. பட்டதாரிகள் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருவதால், அவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது. இவர்களில் மாதம் ரூ. 2 ஆயிரம் சம்பளம் கூட கிடைக்காமல் தவிப்பவர்களும் உண்டு. பி.இ., படித்துவிட்டாலே பிரபல சாஃப்ட்வேர் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடும், வெளிநாடுகளில் வேலை வாங்கி லட்சம் லட்சமாக சம்பாதித்துவிடலாம் என்று சொல்லிவிட முடியாது.
நீங்கள் படிப்பது பி.இ. பட்டமா அல்லது பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை அறிவியல் பட்டமா என்பது முக்கியமல்ல. தரமான கல்வி தரும் கல்லூரியில் படித்தீர்களா என்பதுதான் முக்கியம்.
வேலைத் திறன் பயிற்சி தீவிரப்படுத்தப்படுமா?:
தரமான கல்லூரிகளில் கல்வி அறிவை மட்டும் அல்லாமல், வேலைத் திறன் பயிற்சியையும் கூடுதலாக மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
இந்தியாவில் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவரும் மாணவர்களில் 30 சதவீதத்தினர் மட்டுமே வேலைக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று "மெக்கன்ஸி' என்ற பிரபல ஆலோசனை நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

