/

எல்லைக் கோடு: சாலை நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி

Updated On :21 ஆகஸ்ட் 2016, 12:27 pm

எல்லைக் கோட்டைக் காகின்றோம்!
      என்றும் காப்போம் இமைக்காது!
தில்லைப் பெருமான் பேர்சொல்லி
     திக்கை நாங்கள் காக்கின்றோம்!
சொல்லில் ஆணை பிறந்துதுமே
     துணிந்து நாங்கள் போரிடுவோம்!
ஒல்லை ஏதும் நேராமல்
     உவந்து கோட்டைக் காப்போமே!
சொல்லை ஏற்றுப் பணிசெய்வோம்!
     சுகத்தை தியாகம் செய்கின்றோம்!
கல்லும் முள்ளும் மலைமற்றும்
    கார்கில் பனியும் பொருட்படுத்தோம்!
வில்லும் நாணும் தேவையில்லை!
    விருப்பால் சேவை செய்திடுவோம்! 
அல்லல் அடையோம்! அகமகிழ்ந்தே
     அன்னை நாட்டைக் காத்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.