/

வான மழை நீ யெனக்கு: சசி எழில்மணி

Updated On :31 ஆகஸ்ட் 2016, 11:24 am

பார்க்கும் பார்வைகள்
கணைகள் தொடுத்திட
ஆசை மொழிகள்
இதயங்கள் கேட்டிட
உள்ளங்கள் இரண்டும்
கதைகள் பேசிட
தீண்டும் தென்றல்
சாரலென நனைத்திட
இன்சுவை கொண்டே
இளமனம் மயங்கிட
எண்ணத்தில் எல்லாம்
வானவில் தெரிந்திட
இளமை குளிர்ந்திட
தேகம் நனைந்திட
தாகம் தீர்ந்திட
ஏக்கங்கள் வேர்விட
ஆசைகள் துளிர்விட
மோகம் ஓய்ந்திட
விழுந்திடும் துளி நீ
தாங்கிடும் புவி நான்
வானமழை நீயெனக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.