வான மழை நீ யெனக்கு: சசி எழில்மணி

Updated on
1 min read

பார்க்கும் பார்வைகள்
கணைகள் தொடுத்திட
ஆசை மொழிகள்
இதயங்கள் கேட்டிட
உள்ளங்கள் இரண்டும்
கதைகள் பேசிட
தீண்டும் தென்றல்
சாரலென நனைத்திட
இன்சுவை கொண்டே
இளமனம் மயங்கிட
எண்ணத்தில் எல்லாம்
வானவில் தெரிந்திட
இளமை குளிர்ந்திட
தேகம் நனைந்திட
தாகம் தீர்ந்திட
ஏக்கங்கள் வேர்விட
ஆசைகள் துளிர்விட
மோகம் ஓய்ந்திட
விழுந்திடும் துளி நீ
தாங்கிடும் புவி நான்
வானமழை நீயெனக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com