வான் மழை ஒன்றே
விவசாயின் வாழ்வாதாரம் ...
வான் மட்டுமா பொய்த்து போகிறது...
வானோடு சேர்ந்து விவசாயின் நம்பிக்கை அன்றோ
பொய்த்து போகிறது...
மண்வெட்டி தோளில் தூங்குது...
மடைதிறக்க வாய்காலில்
நீர்யில்லாமல்...
சுமந்த மண்வெட்டியொரு சுமை என்றால்
குடும்பம் பெருஞ்சுமையன்றோ...
சுமை தீரும் காலம் விவசாயிக்குண்டோ ???
சுகம் காணும் நேரம் வருவதுண்டோ ???
கனவுகள் ஒன்றே நிரந்தரம்
காலச்சுழல் அதில் பம்பரமாய் சுழலும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.