பசுமை புரட்சி கொண்ட பாரதம் பண புரட்சி கொண்டது
செல்லும் காசு ஒரு சொல்லால் செல்லா காசு ஆனது
இரவு பகல் பாராமல் ஓடி ஓடி உழைத்து
ஈட்டிய பணத்தை வங்கியில் போட்டு வைத்து
நிம்மதி என்று நினைத்தால் அத்தனையும்
செல்லா காசு என்றனர்
அதை செலுத்த வங்கி வாசலில் வரிசையாய்
நின்று விரல் நுனியில் மை வைத்தார்கள்
செல்லா காசு செல்லுபடியானது
காலம் மாறும் கனவுகள் நனவாகும்
என்ற நம்பிக்கையோடு நாட்கள் நகர்கிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.