நீதியைத் தேடி: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated on
1 min read
1.  நீதிதன்னை   தேடித்தேடி   மக்களலைவ   தெல்லாம்              நிறையவே   உண்டுநம்மின்   நாட்டினிலே   எங்கும் !      பாதித்த   மக்களவர்   அலைவதையே   தான்நாம்              பார்த்திட்டக்   காலம்போய்   மாநிலங்கள்   தமக்குள்     மோதியின்று   நீதிதேடும்   நிலைமைதனைக்   காணல்              முன்னேற்றம்   எனத்தகுமோ ?  அவலமதே   அன்றோ ?     வேடிக்கைப்   பார்ப்பதுவோ   மத்திய அர   சாங்கம்,              விரிசல்வரக்   காணாதோ  இந்தியநற்   தேசம் ?2.  நதிநீரும்   விரைந்தோடும்   கடல்தன்னைத்   தேடி ,              நாடுகள்   பலகடந்தும்   போகும்பல   நதிகள் !      குதித்தோடும்   அதன்போகை   தடுப்பதுவும்  முறையோ,              குற்றமென்றும்    ஆகாதோ   இயற்கைதனை   மாற்றல் ?      சதியதனை   செயத்தகுமோ   போக்குதனை   மாற்ற ,              சாதனையென்  றாகிடுமோ ?  சகிக்கத்தான்   தகுமோ ?      விதிப்படியே   அவைபாயும் ;  விட்டுவிடல்   வேண்டும்              வீண்முயற்சி   தனைக்கொள்ள   விரயமதே   விஞ்சும் !3.   நதிநீரைப்   பகிர்வதிலே   பேதங்கொண்டப்   போதும்               நாம்மன்றத்   தீர்ப்புதனை   மதித்திடுதல்   வேண்டும் !       நேர்மையதும்   பிறழ்வதுவோ ?  நீதியதும்   உறங்குவதோ ?               நிலைத்தநல்   அமைதிகெட   வன்முறையும்   படர்வதுவோ ?       பாரிதனில்   நம்நாடும்   பண்பட்டதோர்   நாடெனவே               பலரும்நமைப்   போற்றியதும்   பிழையெனவே   தகுமோ ?       சீர்கொண்டப்   பெருமையதும்  சிறப்பதுவும்  அழிவுறவோ ,               சிலர்தம்மின்   சுயநலத்தால்   சிக்கலிங்கே   விளைவதுவோ ?4.   போராடி   நாமன்று   சுதந்திரத்தைப்   பெற்றோம் ,               பொன்னான   வாழ்வடையும்   கனவுதனைக்  கண்டோம் !      தீராதப்   பிரச்சனைகள்   தீர்ந்திடுமாம்   என்றோம்,               திகட்டாநல்   வாழ்வேதான்   எனமகிழ்வு   கொண்டோம் !      சீராகும்   வளங்கள்தனை    கண்டுய்யத்   தானே               சிந்தினர்நம்   முன்னோர்கள்   இரத்தமது   தன்னை  !      ஆறாகப்   பெருகுவதேன்   இன்றிந்த   நாட்டில்,                அமைதிக்குப்   பங்கம்வரல்   அவலமதே   அன்றோ ?5.   நாடிதனின்    உயிர்நாடி   சட்டம் ஒழுங்கு    நீதி ,                நாமேஅதை   மதியாமை   ஆபத்தான   வியாதி !      ஓடிவரும்   நதிநீரைத்   தடுப்பதென்ன   முறைமை ?                உண்மையிலே   நதியெல்லாம்   நாட்டின்பொது   உடமை !      வேடிக்கைப்   பார்ப்பதுவோ   அதனைநாம்   இழந்தும் ,                வீண்தரிசாய்ப்   போவதுவோ   தஞ்சைமா   நிலமும் ?      பேடிகளென்   றாவோமோ ,  உரிமைதனை   மீட்ப்போம் ;                பிறர்நம்மை   ஏய்ப்பதனைப்   பொறுக்கவரும்   அழிவே !              

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com