பொம்மைகள்:  அழகூர். அருண். ஞானசேகரன்.

Updated on
1 min read
1.  அழகான  பொம்மைகளை  வீட்டினில்   கொலுவென                    அடுக்கினாம்   மகிழ்ந்திடலாம்,             அவைகளை   நாட்டின்   பொறுப்பினில்   அமர்த்திட                    அவலத்தைக்   கண்டிடுவோம் !     வழக்கத்தில்   இருந்திட்ட   தெல்லாமும்  அறிஞரை                     வாவெனும்   நன்னெறிதான்,              வாழையடி   வாழையன   இருந்திட்ட   இந்தனல்                     வழக்கத்தை   மாற்றிவிட்டோம் !     முழங்கால்   சேற்றினில்   சிக்கித்   தவிக்கிரோம்                    முன்னேறந்   தனையிழந்தோம் ,              மூடமை   தன்னைக்   கொண்டிட்டப்   பலனென்றே                    முழுமையாய்   இன்றுணர்ந்தோம் !      சழக்கர்கள்   விலகட்டும்   அறிஞர்கள்   ஆளட்டும்                     சாதனைகள்   தொடரட்டும் ;              சத்திய   நெறிதன்னை    என்றென்றும்  காத்திட்டு                     சரித்திரம்   படைக்கக்டும் !2.   பொம்மைகள்   நாடிதை   ஆண்டிடக்   காண்பதும்                    பொலிவினை   பெற்றிட்டு   உய்வுறத்   தகுமோ ?       எம்மையில்   நாமென்ன   பாவத்தைச்   செயிதோம்                     இத்தகு   ஆட்சியில்   வளமையை   இழக்க ?       நம்மின்   தவறே  இதற்கெல்லாம்   காரணம்                    நாமிதை  உணரா   திருந்திடத்   தகுமோ ?       செம்மையை   நாட்டினில்   விளைவிக்க   வேண்டின்                    சீர்மிக்க   அறிஞரைத்   தேர்தல்நம்   கடனாம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com