மனம் எனும் மாயப் பேய் : ஆப்ரகாம் வேளாங்கண்ணி

Updated on
1 min read

சகலத் தகுதியும் உடைய அவளை எண்ணி
எத்தகுதியும் கிடையாத என்னை என்மனம்
காதலிக்கத்தூண்டி கையில் இருந்த தம்படி
அரைகுறையையும் தீரக் கரைத்து காதல்
முத்துக் குளிக்கச்சொல்லி என்னை உசுப்பி
பித்துப்பிடித்தலைந்திட வைத்ததென்
"மனம் எனும் மாயப் பேய்"

பெண்மையின்
இனம் சேரவிடாது விரட்டிட அதன் சூசகமான 
குணம் இன்னதென அறிந் தப்பின்னும் கடும்
சினம் அதன்மேல் கொண் டென்ன லாபம் கூறும் 
வனம் விட்ட கண்கட்டியக் கபோதியாய்த் திரிய
பணம் ஒன்றே ஜீவிதம் என் றெண்ணி மனம்

இரணம் ஆக்கியதை என்ன வெனச்சொல்ல
தினம் அதையே எண்ணி நாளை ஒட்டிட மன
ஊணம் உற்றேன்கேட் பாறற்று நானும் மது
பானம் ஏந்தலானேன் அதோடு மட்டுமன்று

ஏணம் ஏந்தி இரந்துண்ணும் கதிக்கு ஆளாகிட மதி
ஈனம் என்றல்லவா எண்ணு கிறேன் காதலை இன்று
ஞானம் பிறக்கின்றது கண் கெட்டப்பிண்ணே முதல்
கோணல் முற்றும் கோணல் என்பது சரியேயது

கானல் நீரைத்தேடினேன் காதல் தாகந்தீர
தணலில் நின்றுக்கொண்டு அது சாத்தியமோ
"மனம் எனும் மாயப் பேய்" நடுவில் பேயாகியே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com