தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மனம் எனும் மாயப் பேய்: கா.ந.கல்யாணசுந்தரம் 

Updated On :17 அக்டோபர் 2016, 10:23 am
கண்மூடி தியானிக்கும் 
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின் 
அந்தரங்க மொழி 
மௌனம்தான் !
இழையோடிய புன்னகை 
எதிர்வரும் இன்னல்களை 
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள் 
வளமானவாழ்வின் 
நாற்றங்கால்கள் !
ஓசையின்றி ஓடும் 
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க... 
ஐம்புலன்களையும் 
அடக்கி ஆளா மானுடம் 
தினம் தினம் இழக்கிறது 
‘சும்மா’ இருக்கும் சுகம்தனை .... 
மனம் எனும் மாயப்பேயின் 
பிடிக்குள் அகப்பட்டு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.