கண்மூடி தியானிக்கும் விழிகளின் கட்டுப்பாட்டில் எண்ண அலைகள்...! ஒரு பிரபஞ்சத்தின் அந்தரங்க மொழி மௌனம்தான் ! இழையோடிய புன்னகை எதிர்வரும் இன்னல்களை இல்லாமலாக்கும் ! நற்சிந்தனைகள் வளமானவாழ்வின் நாற்றங்கால்கள் ! ஓசையின்றி ஓடும் காலநதியில் ஆசைப்படகுகள் இலக்கின்றி பயணிக்க... ஐம்புலன்களையும் அடக்கி ஆளா மானுடம் தினம் தினம் இழக்கிறது ‘சும்மா’ இருக்கும் சுகம்தனை .... மனம் எனும் மாயப்பேயின் பிடிக்குள் அகப்பட்டு !