மனம் எனும் மாயப் பேய்: கா.ந.கல்யாணசுந்தரம் 

Updated on
1 min read
கண்மூடி தியானிக்கும் 
விழிகளின் கட்டுப்பாட்டில்
எண்ண அலைகள்...!
ஒரு பிரபஞ்சத்தின் 
அந்தரங்க மொழி 
மௌனம்தான் !
இழையோடிய புன்னகை 
எதிர்வரும் இன்னல்களை 
இல்லாமலாக்கும் !
நற்சிந்தனைகள் 
வளமானவாழ்வின் 
நாற்றங்கால்கள் !
ஓசையின்றி ஓடும் 
காலநதியில் 
ஆசைப்படகுகள்
இலக்கின்றி பயணிக்க... 
ஐம்புலன்களையும் 
அடக்கி ஆளா மானுடம் 
தினம் தினம் இழக்கிறது 
‘சும்மா’ இருக்கும் சுகம்தனை .... 
மனம் எனும் மாயப்பேயின் 
பிடிக்குள் அகப்பட்டு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com