நெல்லும் புல்லும்
வயலின் விருந்தாளியாய்
நல்ல குளிர்ச்சி காண
பசுமையின் தாயகமாய்
நெல்லின் உயரம் வானைத்தொட
புன்னகைக்கும் புல்லின் பசுமை பெருகவே
நெல்லின் தாகம் போக
புல்லின் தாகம் தீருமே
நெல்லின் வளர்ச்சி காண
புல்லிற்கு வியப்பாய்த் தெரியமோ ?
வயலில் புல்லின் வளர்ச்சி கண்டு
வம்பிழுக்கும் களைச்செடிகள் !
நெல்தரும் தண்ணீர் தானம்
நெல்லின் பரிசு களைச்செடிகளுக்கு !
விவசாயி தருவான் களைக்கொல்லி
விதைக்குள்ளே மரத்தின் பிம்பம்
வீதிக்கு வரும் நீரின் பலனாய்
மண்ணில் விழுந்த விதை மரமாகி
கண்ணால் காண கனியாகி
பண் பாடுதே இளநெஞ்சம் !
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லின் பசியை தீர்க்கட்டுமே !!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.