நீதியைத்தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated on
1 min read
ஆதியிலே   புறாவிட்ட   கண்ணீர்க்   காக            அரிந்துசதை   அளித்துமன்னன்   நீதி   காத்தான்வாதியாக   பசுஅடித்த    மணியைக்   கேட்டு            வழங்கிட்டான்   நீதியினை   மகனைக்   கொன்றுஏதிலியாய்   சிலம்புடைத்த    பெண்ணிற்   காக            ஏந்தியுயிர்    தந்துநீதி   காத்த   மண்ணில்நீதிவிலை   போகாதெனும்    நம்பிக்   கையில்            நீதியினைத்    தேடுகின்றார்   கிடைக்கு   மென்றே !பண்ணிசைத்துக்   காவிரியாள்   நடந்தா   ளென்று            பகர்கின்ற   பாடல்கள்   பலவி   ருந்தும்கண்முன்னே   காட்சிதரத்   தடைவி   தித்துக்            கன்னடத்தான்    சிறைக்குள்ளே   அடைத்து   வைக்கக்கண்ணெல்லாம்   பூரிக்க   வயல்கள்    பூத்துக்            கண்டிட்ட    முப்போகம்   கனவாய்ப்   போகத்தண்ணீர்க்காய்   நீதியினைத்   தேடித்   தேடித்            தவிக்கின்றான்   விவசாயி   தமிழ  கத்தில் !காலந்தான்   கடந்தபோதும்   உச்ச   மன்றம்            காவிரியாள்    விலங்கொடித்துத்   தீர்ப்ப   ளிக்கப்பாலமாக    இருக்கின்ற   நடுவண்   ஆட்சி            பசுதானா   தோலணிந்த   புலியா   என்னும்கோலத்தின்   ஐயத்தைத்   தீர்க்கும்   வண்ணம்            கோல்சாயா    நடவடிக்கை   எடுக்க   வேண்டும்சீலமுடன்   ஒற்றுமையாய்    இந்தி    யாவும்            சிறப்புறவே   நேயமுடன்   வாழ   வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com