நீதியைத்தேடி : அருள் .க.  இராபர்ட் 

Updated on
1 min read

தேரா மன்னனை தேறிட வைத்து 
தெளிந்தது ஓர் காலம் 
போராடாமல் நடுமணி அடித்து
பெற்றது ஓர் காலம்

புறாவுக்காக தொடைக்கறி கொடுத்து 
பூரித்ததோர் காலம்  
கரவாது நிறைவாய் மக்களிடையே 
கனிந்தது ஓர் காலம் 

காசும் பணமும் கையில் இருப்போர் 
களித்திடும் இக்காலம் 
பேசும்பரிசும் பதவியும் நிதியும் 
பேரமும் இக்காலம்
நீசர் கைகளில் ஆட்சி இருப்பதால் 

நீதியைக் காணவில்லை 
தேசத்தின் வீதியில் நீதியைத் தேடி 

திகைக்கிறோம் இக்காலம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com