சந்திக்கும்
ஓர்நொடி
சிமிட்டும்
கண்களால்தான்
பல சாம்ராஜ்யங்கள்
உருண்டோடி
உருத்
தெரியாமல்
மறைந்திருக்கிறது
உலகத்தில்
மாபெரும்
காவியங்கள்
எல்லாம்
ஒயிலாய்…
ஒய்யாரமாய்
சந்திக்கின்ற
கண்களின்
சிமிட்டலில்
உருவானவைதான்
கவிச்சக்கரவர்த்தி
கம்பன்
அந்த கம்பனின்
ஒரே மகன்
அம்பிகாபதி
அவன் மட்டும்
அமராவதியின்
கண் சிமிட்டலை
சந்திக்காதிருந்தால்
தமிழகத்திற்கு
இன்னுமொரு
கவிச்சக்கரவர்த்தி
கிடைத்திருப்பான்
யூ டூ பூரூட்டஸ்
என்று “சீசர்”
தன் இன்னுயிரை
இழந்ததெல்லாம்
அரசியல்
நண்பர்கள் செய்த
கண் சிமிட்டல்களின்
காரணந்தானே ?
வானத்தில்
இருந்தாலும் சூரியன்
பூமியைப்
பார்த்து
செய்கின்ற
கண்
சிமிட்டல்
மண்ணுக்கு
ஒளியாக
நிறைகிறது
கார் மேகங்கள்
செய்து கொள்ளும்
காதல் விளையாட்டுக்
கண் சிமிட்டல்
பயிர் செழிக்கவும்
உயிர் பிழைக்கவும்
மழையாக
பொழிகிறது
இரண்டு கண் என்பதால்
யாரும்
இரண்டு வகையில்
கண் சிமிட்டக்
கூடாது
மனிதா நீ
திறன் நோக்கிக்
கண் சிமிட்டல் நன்றே…
ஆனால்
அறன் நோக்கி
கண் சிமிட்டல்
அனைவருக்கும்
நன்றே !
நன்றே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.