நீ கண்சிமிட்டினால் : கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

Updated on
1 min read

சந்திக்கும் 
ஓர்நொடி
சிமிட்டும்
கண்களால்தான்
பல சாம்ராஜ்யங்கள்
உருண்டோடி 
உருத்
தெரியாமல்
மறைந்திருக்கிறது

உலகத்தில்
மாபெரும்
காவியங்கள்
எல்லாம்
ஒயிலாய்…
ஒய்யாரமாய்
சந்திக்கின்ற
கண்களின்
சிமிட்டலில்
உருவானவைதான்

கவிச்சக்கரவர்த்தி
கம்பன்
அந்த கம்பனின்
ஒரே மகன்
அம்பிகாபதி

அவன் மட்டும்
அமராவதியின்
கண் சிமிட்டலை
சந்திக்காதிருந்தால்
தமிழகத்திற்கு
இன்னுமொரு
கவிச்சக்கரவர்த்தி
கிடைத்திருப்பான்

யூ டூ பூரூட்டஸ்
என்று “சீசர்”
தன் இன்னுயிரை
இழந்ததெல்லாம்    
அரசியல் 
நண்பர்கள் செய்த
கண் சிமிட்டல்களின்
காரணந்தானே ?

வானத்தில்
இருந்தாலும் சூரியன்
பூமியைப் 
பார்த்து
செய்கின்ற
கண் 
சிமிட்டல்
மண்ணுக்கு
ஒளியாக
நிறைகிறது

கார் மேகங்கள்
செய்து கொள்ளும்
காதல் விளையாட்டுக்
கண் சிமிட்டல்
பயிர் செழிக்கவும்
உயிர் பிழைக்கவும்
மழையாக
பொழிகிறது

இரண்டு கண் என்பதால்
யாரும்
இரண்டு வகையில் 
கண் சிமிட்டக்
கூடாது

மனிதா நீ
திறன் நோக்கிக்
கண் சிமிட்டல் நன்றே…
ஆனால்
அறன் நோக்கி
கண் சிமிட்டல்
அனைவருக்கும் 
நன்றே !
நன்றே !
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com