தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நீ கண் சிமிட்டினால் : கலைபரமேஷ்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:22 am

கவிதைமணி

கையில் ஏந்தி கண் சிமிட்டாமல் 
காத்திருந்தேன் – நீ பிறந்த பொழுது
உன் கண் அசைவில் 
எனக்கு உயிர் கொடுத்தாயடி
முதல் முறை என் கண்ணீரை 
உன் மீது அருவியாக்கினேன்
இமைகளை அசைத்து சிரித்து நீ 
அழைத்த அம்மாவிற்காக
என் மாரோடு உன்னை அணைத்து
பால் கொடுக்கும்பொழுது
போதும் என்றாயே 
பட்டாம்பூச்சி கண் சிமிட்டலில்
பருவமடைந்து வந்த உதிரத்தின் வலியை 
என் கை இறுக்க பிடித்து 
விழி மூடி அழுத பொழுது 
உதிர்ந்து போனேனடி-நான்
சிறு வலியையே தாங்காத நீ 
யாரோ சிலரின் பசிக்கு இரையாகி
சத்தமின்றி கதறி அழுகிறாயடி இறந்த பின்பும் 
இப்பொழுது அசைப்பாயடி 
அந்த பட்டாம்பூச்சி கண்சிமிட்டலை
என் கனவிலாவது?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.