மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீ கண் சிமிட்டினால்: கவிஞர் பி.மதியழகன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 10:28 am

கவிதைமணி

கலி விருத்தப்பா

உடைந்த கம்மாய்களும் உழவர் மறுவாழ்வும்
இடைஞ்சலாய் இருக்கும் இன்னல்கள் யாவும்
துடைத்தொழிப்பார் மக்கள் துயர் துடைப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

நாட்டிலே நடக்கும் நல்லது கெட்டதெல்லாம்
பாட்டினில் பாடும் பாவலர்கள் கருத்துக்களை
கேட்டேமுனைப்போடு காட்டுவார் பணியில்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

முத்தமிழ் அழித்திட முயலுவோர் மூக்கறுப்பார்
எத்திசையில்எதிரிகள்ஏவும் ஏவுகணைகளை
வித்தைகள் கற்றிட்ட வீரர்கள் வேரறுப்பார்கள்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

மதச்சண்டை மடமை மாறணும் மாண்புடனே
இதயம் உள்ளார் இரக்கமனம் வாழவேண்டும்
இதிகாசங்கள் சொன்ன இன்புடனே இருப்பார்
கோமான் நீ கண் சிமிட்டினால்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.