/

வஞ்சம் செய்வாரோடு: ஏழுமலை நாகேந்திரன் 

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:34 pm

கவிதைமணி

காப்பியங்கள் சொன்னது
செஞ்சொற்று கடனாயினும்
வஞ்சகரோடு இணைந்திட்டால்
அழிவு நிச்சயம்!

பார்புகழும் கொடைக்குணமும்
வீரமும் அழிவை நிறுத்தாது!
சோமாலியாவில்
நிலமகளுக்கு நீங்காத்துயர்
அளித்திட்ட கொடுமை
இன்று தலைவிரித்தாடுது
பஞ்சம் பசி பட்டினிச்சாவுகள்

நிலமகளை சீர் செய்து
நாம் இன்று காத்திடாவிடில்
வஞ்சகம் செய்வாரோடு
நாமிணங்கி நாளை
நம் சந்ததி துன்புறும்
நிலைக்கு துணையாகிடும்
துர்பாக்கியநிலையே
நமக்கு மிஞ்சிடும்.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.