தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் மஹாரதி

Updated on
1 min read

மொழிகளின் விரல்கள்
தீண்டாத ஒரு யுகாந்திரப்
புதிர் காலத்தில்
மனிதக் கால் தடங்கள்
பதியாத ஒரு வனாந்தரத்தில்
வசித்த நாட்களைக் காலம்
புசித்து முடித்துதூக்கியெறிந்து விட்டது

காந்தர்வக் கனவுகள் மான்களாகவும்
கவிதைத் தோகைகள் விரித்தாடவும்
சாகுந்தலம் அரங்கேறிய தேவக்காடுகள்
ஊழிக்காலங்கள் முடிந்தவுடன்
இரைச்சல் சாலைகளாக
தேய்ந்துத்தேய்ந்து இறந்துபோயின

வண்ணத்துப்பூச்சிகள் சுமந்த
பூக்களின் கருப்பைகளுக்குள்
குடியிருந்த கனவுகள்
ஆலைப்புகைப் போக்கிகள் வழி
ஆவியாகப் போயின
என் நுரையீரல்களில்
காற்றுக்குப் பதில்
கவிதைகளை
வைத்திருக்கிறேன்
காதுகளுக்குச் சொல்வதினும்
காற்றுக்குச் சொல்கிறேன்
கவிதைகளை
எல்லோரும் உறங்கும்போது
உறங்காமல் இருக்கும்
நடுநிசி நிலாவின்
வெள்ளை மார்பகங்களில்
பால் குடித்துப் பேசுகிறேன்
நாவுகள் இல்லாத தேசத்தில்
தனிமையோடு மட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com