வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் மா.உலகநாதன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:19 am

கவிதைமணி

தனிமையோடு பேசத் தான் விழைந்தேன்;
ஆனால்,அது
பேச மறுத்துவிட்டது;
என்னென்று கேட்டேன்?
நட்பு, சுற்றம் என 
நாளும் உன்னைப் 
பலரும் சூழ்ந்திருக்க,
ஒத்தும் உதவியும்
பலர் போற்ற
வாழவே, உனைப் படைத்தேன்!
அவர்தம் மகிழ்ச்சியிலே
அகமகிழ்தல் யாருக்கும் 
கிட்டுவதுண்டோ,சொல்?
ஆனால், கடுகுள்ளம் கொண்டு
நத்தைபோல் உன்னை நீ
சுருக்கிக் கொண்டால் 
நானென்ன செய்வது?
நடந்து பார்,நாடெல்லாம் உன் சொந்தம்;
கொடுத்துப் பார்,
குவலயமே குதூகலிக்கும்;
இப் பிறவி வாய்த்த
துனக்கு,இனி  
இன்பமே எந்நாளும்
துன்பமில்லை;தனிமையில்லை!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.