வயலின் வயிறும் வெடித்துக் காய்ந்து
வற்றா தாகந் தன்னில் வதைந்து
இயலா நிலையில் ஏங்கித் தவித்து
இரவும் பகலும் மழைக்காய் ஏங்கின!
வயலுழும் உழவர் வானம் பார்த்து
வயிறும் காய்ந்து வதங்கி கிடக்க
புயலாய் வந்து ஓர்மழை இரவில்
பொழிந்து புவியைக் குளிர வைத்திட
வழிந்த மழையால் உழவர் மகிழ்ந்தர்!
எங்கும் வெள்ளம் கும்மாளம் போட
எளியோர் மனமும் இன்பங் கண்டன;
பொங்கிய மழைவெள் ளத்தால் மகிழ்வைப்
பிடுங்கு மென்று உணரா(து) இருந்தனர்!
வயல்பயிர், மாந்தர்,விலங்கு, வீட்டை
வெள்ளம் விழுங்கின; வேர்பி டித்துப்
புயல்மழை நின்றன; பிழைப்பு மின்றி
பசியில் தவித்தனர்; பிணமாய்ப் போயினர்!
மழைஇர வின்றும் அச்ச மூட்டின;
மழையோ எதிரியாய் மாறிய தாலே;
மழைஇர(வு)ஈந்த வலியால் மழையை
வெறுத்தால் மண்ணுயிர் வாழாது ; அழைப்போம்!
- நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸ் பும்ராவை அதிகம் நம்பியிருக்கக் கூடாது: டு பிளெஸ்ஸிஸ்

ஃபிடல் காஸ்ட்ரோ (அமெரிக்காவை கதிகலங்கச் செய்த புரட்சி போராளி)

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


