வாழ்க்கையெனும் போர்க்களம்: சரஸ்வதி ராசேந்திரன்

Updated on
1 min read
வாழ்வில் ஏற்றமும் தாழ்வும் இயல்பே தான்தாழ்வே தினந்தோறும் என்றால் வாழ்வதெப்போமண்மீது  எண்ணியபடி வாழ்ந்தவர்  இல்லைமரண வலி  தருகின்ற வாழ்வின் தொல்லை ஏர் பிடித்து வாழ்ந்தவர்களை  மூளியாக்கிபோர் முனைக்கு மக்களை கொண்டு சென்றார்தினம் நடக்கும்  போராட்டங்களில் மக்கள்மனம் ஓய்ந்து தடுமாறி நிற்கின்றார்சந்தையென கல்வியாக்கி  விற்கின்றார்சாதியைத் தூண்டிவிட்டு குளிர் காய்கின்றார்காவலாய் இருக்க வேண்டியவர்களேகயமைத்தனம் செய்கிறார் கவலையின்றி வழியெல்லாம் வன்மங்கள் ஒரு  நாள்கூட நிம்மதியில்லைவங்கி ஊழியர்களேமக்கள் பணத்தைத் திருடுகிறார்கள்ஊர்விட்டு எங்கு சென்றாலும் போர்க்களம்தான்உருப்படியில்லா அரசால்  வாழ்க்கையே போராட்டம்தான் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com