வாழ்க்கையைனும் போர்க்களம்: ரெத்தின.ஆத்மநாதன்

Updated on
1 min read
வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வறுமையில்   வாழும்    வக்கற்றோர்க்கு!வாழ்க்கையே  யிங்கு  போர்க்களந்தான்வாய்மையுடன்  வாழ  நினைப்போருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாய் பேசாமல் கடமை செய்வோருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வஞ்சகமின்றி  வாழ  நினைப்போருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வஞ்சியர்  தம்மில் அழகுடையோர்க்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாழ்நாளெல்லாம் நன்மை செய்வோருக்கு!வாழ்க்கையே யிங்கு போர்க்களந்தான்வாஞ்சை   மிகுந்து  வாழ்வோர்தமக்கு!போர்க்களமாக்கும் பொறுக்கிகள் தம்மைபொசுக்கிவிட்டு    உயர்ந்திட   வேணும்!பொய்யேபேசி     புகழில்     வாழும்புளுகர்களை   அழித்திட  வேணும்!காலமும்  பொழுதும்  களைத்திடாமல்கடமை   செய்யும்  கண்ணியவான்கள்நிம்மதியாக    நித்தம்     வாழநெஞ்சில்உறுதி   மிகவும்  கொண்டேஉழைத்திட வேண்டும் உறுதியாக!அரசியல்  பெயரால்  அக்கிரமங்கள்அதிகம் செய்யும் உளுத்தர்தம்மைஓட ஓட  விரட்டிட  வேண்டும்ஒருவர்கூட மிச்சம் வைக்காமல்அழித்திட வேண்டும் அமைதியாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com