ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவி.செங்குட்டுவன் 

Updated On :3 ஜூன் 2018, 9:10 am

வாழும் கலைகள் வகை வகையாய்
வண்ண மீன்களாய் நாளும் இருக்க
தாழும் படியான செயல்கள் மூலம்
வீழும் காரணம் அறியேன் நானும்….

விந்தைகள் பலவும் நிகழும் இந்நாளில்
சந்தைப் பொருளாய் உனது திறனை
வீணாக்கியே உலகில் நீயும் என்றும்
விவாதப் பொருளாய் ஆவது ஏனோ……..

சொந்த பந்தம் அதிகம் இருந்தும்
சொத்து சுகம் அனுபவித்து வந்தும்
உதவிக்கு ஏங்கியே நாளும் வாழ்ந்து
உழைப்பை மறந்து வாழ்வது ஏனோ….

அண்டை அயலார் நட்பை என்றும்
அதிகம் போற்றியே வாழும் நீதான்
உற்றார் உறவினர் உறவை இழந்து
உணர்வு ஏதுமின்றி திரிவது ஏனோ…..

ஆயிரம் வாய்ப்புகள் உலகில் இன்று
அள்ளியே தெளித்து உள்ளது நாளும்
துள்ளியே சென்று அவற்றை நீயும்
பிள்ளை போலே அள்ளிச் செல்வாயே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.