ஒருமுறையேனும்: ப.வீரக்குமார்

Updated on
1 min read

பித்தந் தெளிந்து
சத்தம் மறந்து
சங்கடங் குறைத்து
சிம்புட் பறவையாய்

சிறகை விரித்து;
அகண்ட புவியில்
ஆனந்தம் மணக்க
ஆசை சுரப்பியைத்
தூண்டிய செய்து;

மேகத்துக்குள்
போதனைகள் கரைத்து;
பால் வெளியில் 
பாங்கோடு சுற்றி; 

பண்பட்ட மனங் கொண்டு
புண் தரும் வழிதடுத்து;
ஏகாந்தப் பொருளை
ஓங்காரத்தில் நிறுத்தி
ஓசை கூட்டி

வென்றேன் வென்றேன்;
வாழ்வின்
இன்பத்துள் நுழைந்து
சொர்க்கத்தின் 
வாசல் கடந்து
தேவருடன் கலந்து
செறிவுற்ற சித்தத்தில்
மயங்கிடும் நிலை
என்றாவது 
ஒரு நாள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com