உணவை உண்ணும் போது போற்றிவணங்கினோமா? விவசாயிகளை!தனதுநலனை விட்டு பொதுநலம் பேணும்செவிலியரை நினைத்தோமா?கனவு காணுங்கள் என்றே உரைத்தஅப்துல் கலாம் புத்தகம் படித்தோமா?தினமும் ஒளி நல்கும் ஆதவனின் செயலைபோற்றி மகிழ்ந்தோமா?அன்பாய் அன்னை அறிவாய் தந்தைஅன்றாடம் வணங்கினோமா?பண்பாய் பழகி பாசத்தை கொட்டும்பாட்டி தாத்தாவை மகிழ வைத்தாமோ?தன்னிகரல்லா தனித்தமிழால் காலத்தால்காவியக் கண்ணதாசன் நினைத்தோமா?எண்ணற்ற எண்ணங்கள் வளைய வந்தாலும்நல்லெண்ணம் ஒன்றே வாழ்வை வளமாக்கும்நினைத்தோமா ? ஒரு முறையேனும்….
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.