தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

ஒருமுறையேனும்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

Updated On :25 ஜூன் 2018, 9:36 am
சொல்லுகின்ற சொற்களெல்லாம் சுடுமே என்று   சிந்தனையில் சிறிதேனும் நினைத்தல் உண்டோஅள்ளவேண்டும் பொருளென்று எண்ணும் போதே   அதுவெல்லாம் பொதுவுடமை கணக்கில் உண்டாமெல்லமனம் சொல்லுகின்ற நீதி எல்லாம்   மௌனத்தால் கனிந்திருந்து நினைத்தல் உண்டோஎல்லையின்றி உழைப்பவர்கள் உதிரம் எல்லாம்   உன்செல்வம் என்றுணரும் எண்ணம் உண்டாஉனக்கெனவே சுயநலமாய் பாதை கண்டாய்   உழைக்கின்ற எளியோரை அடிமை என்றாய்கணக்கில்லா துன்பத்தைக் கண்ணால் கண்டும்   கருணையில்லா செயல்காட்டி கடிந்து நின்றாய்மனத்துள்ளே ஓர்நாளும் இரக்கம் இன்றி   மதியில்லா கீழ்பிறப்பாய் நடந்து கொண்டாய்குணங்காட்டி என்றேனும் இசைவாய்ப் பேசி   குளிர்கின்ற ஓர்பார்வை பார்த்த துண்டா ?வருந்துன்பம் வறியவர்க்கா ? நமக்கே என்று   வலிந்துதவும் சிந்தனையை மனதால் நாடுமருளென்ற இருள்நீங்கப் பரிவாய்ப் பேசி   மனமெல்லாம் அருளாகி நேசம் காட்டுதருகின்ற கைதானே தாயின் கைகள்   தணிந்தருள பயந்தோடும் வறுமைப் பேய்கள்இருள்சூழ்ந்த ஏழையரின் இன்னல் தீர   “இதயமொரு முறையேனும் துடித்தல்” வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.