ஒருமுறையேனும்: புலவர் கு.நரசிம்ம சுப்பிரமணியன்

Updated on
1 min read
அன்புத்தாய் தன்சேய் காக்கஒருமுறையேனும் மறப்பதுண்டோ!ஆசைப்பேய் மனம் ஆளாமல்ஒருமுறையேனும் இருப்பதுண்டோ!இன்பம் வேண்டாம் என்றுஒருமுறையேனும்இதயம் துடிப்பதுண்டோ!வென்ற பின்னர் அரசியலார்ஒருமுறையேனும்நமக்காக வருவதுண்டோ!வேடிக்கை மனிதர் கூட்டம்ஒருமுறையேனும்வெற்றி பெற்ற நிலைகளுண்டோ!குற்றம் செய்யும் மனமுடையார்ஒருமுறையேனும்தன்சித்தம் தெளிய நினைப்பதுண்டோ!பலமுறை செய்திடும் செயலைஒருமுறையேனும்எண்ணிச்செய்வோம்பலரும் வாழ்வில் உயர்ந்திடவேஒருமுறையேனும்பரமனைத் துதித்திடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com