காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

யார் இட்ட சாபம்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி

Updated On :21 மே 2018, 9:52 am

தங்கத்தொட்டிலில்
தவழ்ந்து
தாய்ப்பால் குடிக்க ஆசை –
காசை மறந்த பாசம்
அதைக்காட்டும் உறவுகள்
ஒட்டிவிட ஆசை –
இரண்டரை வயதில்
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்
விளையாட்டுப்பள்ளியில்
விழுந்துருள ஆசை –
பசியே தெரியாமல்
பகட்டுத்துணிகளுடன்
படிப்பு மாளிகைக்கு
அடித்தளம் அமைக்க ஆசை –
புல் தரைகளுக்கிடையில்
“புக்” வகுப்புகளோ
“டெக்” வகுப்புகளோ,
அங்கே தான்
அறிவுத்திசுக்களைப்
பெருக்கிவிட ஆசை--
சறுக்கும் பாடத்தில்
சிறப்பு வகுப்புகள்
பெற்றுவிட ஆசை--
சிவகாசியில் சிறுவர் பலருக்கு
எல்லாம் ஆசையில்  
நின்றதோ ?
அந்தப்பிஞ்சுக்கைகளில்
பேனா இல்லையே ?
விரல்கள் பிடிக்குமே தீக்குச்சிகளை ?
இது யார் இட்ட சாபம் ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.