/
கொஞ்சும் தமிழில் கவியெழவே
……………கவிதைக் காதல் தந்தாயே..!
பிஞ்சுக் குழந்தை அழும்படியே
……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?
தஞ்சம் என்றே வந்தவரைத்
……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!
நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி
……………நீண்ட நாளாய்க் காணோமே..?
.
தன்னை மறந்து பாட்டெழுத
……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!
தென்றல் கவிதைத் தினம்தினமே
……………தந்து விட்டுச் சென்றாயே..!
என்போல் பலரும் ஏங்குகின்றார்
……………எப்போ மீண்டும் வருவாயோ..?
மன்னன் மகுடம் கவிதைமணி
……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவி கொலை: கணவன், மாமியாருக்கு ஆயுள்

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

திருவேங்கடபுரத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் பிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி: அமைச்சா் க.விக்னேஷ் உறுதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



