பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மீண்டும் வருவாயா..?

கொஞ்சும் தமிழில் கவியெழவே……………கவிதைக் காதல் தந்தாயே..!

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 8:16 am

கொஞ்சும் தமிழில் கவியெழவே

……………கவிதைக் காதல் தந்தாயே..!

பிஞ்சுக் குழந்தை அழும்படியே

……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?

தஞ்சம் என்றே வந்தவரைத்

……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!

நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி

……………நீண்ட நாளாய்க் காணோமே..?

.

தன்னை மறந்து பாட்டெழுத

……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!

தென்றல் கவிதைத் தினம்தினமே

……………தந்து விட்டுச் சென்றாயே..!

என்போல் பலரும் ஏங்குகின்றார்

……………எப்போ மீண்டும் வருவாயோ..?

மன்னன் மகுடம் கவிதைமணி

……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!

கவிஞர் பெருவை பார்த்தசாரதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.