சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

5. சுண்ண வெண்சந்தனச் சாந்தும் - பாடல் 2

வராக அவதாரம் எடுத்த திருமாலை வென்றதின் அடையாளமாக பன்றிக் கொம்பினை தனது மார்பினிலும்,

Updated On :2 நவம்பர் 2015, 12:08 pm

பூண்டதோர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள
நீண்ட திண்தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண்ணூலும்
காண் தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்கக் கொடியும்
ஈண்டு கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

</p><p align="JUSTIFY"><br /><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கேழல் = பன்றி, எயிறு = பல், புள் = பறவை, இங்கே கொக்கினை குறிக்கின்றது. கொக்கின் வடிவம் எடுத்து பலருக்கும் தீங்கு செய்த குரண்டாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளமாக கொக்கின் இறகினை அணிந்தவர் சிவபெருமான். கட்டங்கம் = மழு,</p><p align="JUSTIFY">வராக அவதாரம் எடுத்த திருமாலை வென்றதின் அடையாளமாக பன்றிக் கொம்பினை தனது மார்பினிலும், ஆமை அவதாரம் எடுத்த திருமாலை வென்றதன் அடையாளமாக ஆமை ஓட்டினையும் தனது மார்பினில் அணிந்தவர் சிவபெருமான்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தனது மார்பினில் பன்றிக் கொம்பு போன்ற பல்லினை ஆபரணமாக அணிந்தவரும், தான் புனைந்து கொண்ட பொன்னின் நிறத்தினை ஒத்த ஆமை ஓட்டின் மேல் புரளுமாறும் தனது அழகிய தோள்களை வலம் வருமாறும், நிலாக்கதிர் போன்ற வெண்மையான பூணூலினை மார்பினில் அணிந்தவரும், கொக்கின் சிறகை ஆபரணமாக அணிந்தவரும், மழுவினைச் சித்திரமாக வரையப் பெற்ற கொடியினை உடையவரும் ஆகிய சிவபெருமான், இங்கே உள்ள கெடில நதிக்கரையில் அமைந்துள்ள அதிகை நகரை உடையவர் ஆவார், இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவபிரானின் அடியானாகிய நான் எதற்கும் அஞ்சமாட்டேன்; எனக்கு அச்சம் விளைவிக்கக்கூடிய பொருள் இனித் தோன்றப்போவதும் இல்லை.</p><p align="JUSTIFY"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.