ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

28. வனபவள வாய் திறந்து - பாடல் 4

இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும்,

Updated On :18 ஜூன் 2016, 5:20 am

பாடல் 4

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தி ஓர் வெண்மழுவன் என்கின்றாளால்
சுரும்பார் மலர்க் கொன்றைச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலன் ஆகியொர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இரும்பார்ந்த = இரும்பினால் செய்யப்பட்ட. கரும்பானல் = கருங்குவளை மலர்கள். பெரும் பாலன் = மனதினை கொள்ளை கொள்ளும் அழகினை உடைய பாலகன் உருவம்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">இரும்பினால் செய்யப்பட்ட சூலத்தினையும், வெண்மழுவையும் ஏந்தியவன் என்றும், வண்டுகளால் சூழப்பட்ட கொன்றை மாலையை அணிந்தவனே என்றும், திருநீற்றை அணிந்தவனே என்றும், தாருகவனத்து பெண்களின் மனதினை கொள்ளை கொண்ட இளமையான தோற்றத்தை உடையவனே என்றும், பின்னப்பட்ட சடையுடனும் தோன்றியவனே என்றும், என் மகள் ஓயாது கூவிக் கொண்டே இருக்கின்றாள். அவள் கருங்குவளை மலர்கள் பூக்கும் கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை கண்டாள் போலும்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.