ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

28. வனபவள வாய் திறந்து - பாடல் 8

ஓர்ந்துகொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும்,

Updated On :21 ஜூன் 2016, 10:41 am

பாடல் 8

ஓரோதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால்
நீரோதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பாரோத மேனிப் பவளம் அவன் நிறமே என்கின்றாளால்
காரோதம் மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">ஓதம் = பாடம், கடல்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">ஓர்ந்துகொள்ளத்தக்க பாடங்கள் உடைய வேதங்களை ஓதிக்கொண்டு, உலகெல்லாம் பலி ஏற்றவனே என்றும், கடல் போன்று பரந்த கங்கை நதியை ஏற்கும் அளவுக்கு உயர்ந்த சடையினை உடையவனே என்றும், பொன்போன்று மிளிரும் சடையை உடையவனே என்றும், உலகினை நான்கு புறங்களிலும் சூழ்ந்து காணப்படும் கடலில் விளையும் பவளத்தின் நிறத்தை உடையவனே என்றும் எனது மகள் ஓயாது சொல்லிக்கொண்டு இருக்கின்றாள். கருமை நிறம் கொண்ட கடலின் அருகே உள்ள கழிப்பாலைத் தலத்தில் உறையும் பெருமானை, எனது மகள் கண்டாள் போலும்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.