ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

29. நங்கையை பாகம் வைத்தார் - பாடல் 2

நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றின் தன்மையை அடியார்களுக்கு உணர்த்தி, அவர்கள் வீடுபேற்றினை உணருமாறு செய்தவர் சிவபெருமான்;

Updated On :25 ஜூன் 2016, 6:38 am

பாடல் 2

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

<strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">விண் = வீடுபேறு. வேட்டல் = விரும்புதல். பயிலுதல் = கூடி இருத்தல்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">நிலையான இன்பத்தினைத் தரும் வீடுபேற்றின் தன்மையை அடியார்களுக்கு உணர்த்தி, அவர்கள் வீடுபேற்றினை உணருமாறு செய்தவர் சிவபெருமான்; வேள்விகளால் விளையும் பயன்களை உணரவைத்து, மக்கள் வேள்விகளை விரும்பச் செய்தவர் சிவபெருமான்; தனது பக்தர்கள் பாடலுடன் இனிமையாக பண்களை இசைத்துப் பாடவும் தன்னை வழிபடுவதில் பயிற்சி பெறவும் வைத்தவர் சிவபெருமான்; வாமனனாகச் சென்று மூன்று அடி மண்ணினை இரந்து பெற்ற திருமால், திரிவிக்ரமனாக மாறி ஈரடியால் மூன்று உலகங்களையும் அளக்க வைத்தவர் சிவபெருமான்; வேறு எவருக்கும் இல்லாத வகையில் தனது நெற்றியில் கண்ணினை வைத்தவரும் அவரே. அவர்தான் கழிப்பாலைத் தலத்தில், கடற்கரைத் தலைவராக விளங்குகின்றார்.</p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.