மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

44. முற்றுணை ஆயினானை - பாடல் 3

புன்னை மரம், செழித்து வளர்ந்துள்ள

Updated On :24 நவம்பர் 2016, 6:30 pm

எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்தி மன்னிக்
கண்பழக்கு ஒன்றுமின்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழுந்திரள் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே    

விளக்கம்

கண்பழக்கம் = இரக்கம். மன்னி = நிலையாக இருத்தல். நாம் அடிக்கடி காணும் ஒருவர் பேரில் இரக்கம் வருவது உலக இயற்கை. ஆனால் உடலுடனே, உயிருடனே எப்போதும் பொருந்தி இருக்கும் தத்துவ தாத்துவீக கூட்டங்களுக்கு அத்தகைய இரக்கம் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மரங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும் நிலையினை மரங்கள் நண்பு செய் சோலை என்று கூறுகின்றார்.

பொழிப்புரை

செண்பகம், ஓங்கி வளர்ந்து காணப்படும் புன்னை மரம், செழித்து வளர்ந்துள்ள குரவம் மற்றும் வேங்கை மரம் ஆகியவை கலந்து ஒன்றுக்கொன்று நெருங்கி காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி தலத்தில் உறையும் பெருமானே, எனது உடலுடன் நெருக்கமாக இருக்கும் 96 தத்துவ தாத்துவீகக் கூட்டங்கள், சிறிதும் எனது உயிரின் மேல் இரக்கம் கொள்ளாமல், தங்கள் போக்கிலே நடந்துகொள்வதால் நான் மிகவும் கலக்கம் அடைந்து வருந்துகின்றேன். இறைவனே நீ தான் எனது கலக்கத்தையும் வருத்தத்தையும் நீக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.