பாடல் 2
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய்க்
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்மினே
விளக்கம்
புள்ளிருக்குவேளூர் தலத்து இறைவனை மனதினில் நினையாதவர் நரகக் குழியில் வீழ்வார்கள் என்று பதிகத்தின் முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான், நம்மை வருத்தவரும் கூற்றுவனின் சீற்றம் குறைந்து முற்றிலும் அழிவதற்கான வழியை இந்த பாடலில் சொல்லிக் கொடுக்கின்றார். மாற்றம் = மறுமொழி.
பொழிப்புரை
உங்களது உலக வாழ்க்கை முடியும் சமயத்தில், கூற்றுவன் உங்களது உயிரினை வருத்துவதற்காக பறித்துச் செல்ல வரும்போது அவனுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் இருக்கும் மனிதர்களே, உங்கள் அருகில் வந்து கூற்றுவன் உமைக் கொல்வதன் முன்னர், நீங்கள் புள்ளிருக்குவேளூர் இறைவனை போற்றும் வல்லமை உடையவர்களாக இருந்தால், கூற்றுவனுக்கு உங்கள் மீது உள்ள சீற்றம் படிப்படியாக குறைந்து தேய்ந்து அறுந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்களாக. இவ்வாறு இறைவனை வழிபட்டு, கூற்றுவனுக்கு மறுமொழி சொல்ல வேண்டிய அவசியத்தை தவிர்ப்பீர்களாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வர் பதவி: நிதீஷ் குமார் நாளை ராஜிநாமா?

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

