சுனையுள் நீல மலர் அன கண்டத்தன்
புனையும் பொன்னிறக் கொன்றை புரி சடைக்
கனையும் பைங்கழலான் கரக் கோயிலை
நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே
விளக்கம்
சுனை = மலையினில் தானே தோன்றிய நீர்நிலை. நீல மலர் = கருங்குவளை மலர். புனையும் = அணியும். கனையும் = ஒலிக்கின்ற.
பொழிப்புரை
மலையினில் தானே தோன்றிய நீர் நிலையில் பூக்கும் குவளை மலர் போன்று, கருமை நிறத்தினை கழுத்தினில் உடையவன் சிவபெருமான். பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரைத் தனது சடையில் அணிபவனும், பசும்பொன்னினால் செய்யப்பட்ட கழல்கள் ஒலிக்குமாறு நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கடம்பூர் திருக்கோயிலை உள்ளத்தினில் நினைக்கும் அடியார்களின் வினைகள், பெருமானின் அருளால் நீங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

