பணம் கொள் பாற்கடல் பாம்பணையானொடும்
மணம் கமழ் மலர்த் தாமரை ஆனவன்
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக் கோயிலே
விளக்கம்
பணம் கொள் பாம்பு = படமெடுத்து ஆடும் பாம்பு. அணையான் = படுக்கையாகக் கொண்டவன். பிணங்கும் = தம்மில் மாறுபட்டபோது, பிரமனும் திருமாலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று ஒருவொருக்கு ஒருவர் வாதம் செய்த நிலையை உணர்த்துகின்றது.
பொழிப்புரை
படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டு பாற்கடலில் படுத்திருக்கும் திருமாலும் நறுமணம் கமழும் மலராகிய தாமரை மலரில் உறையும் பிரமனும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று கடுமையான வாதத்தினை மேற்கொண்டபோது, அவர்களின் முன்னே நீண்ட பேரழலாய் நிமிர்ந்து நின்றவன், எமது பெருமானாகிய சிவபெருமான். அவன் வீற்றிக்கும் இடம், கணங்கள் போற்றி இசைப் பாடல்கள் பாடும் கடம்பூர் கரக் கோயிலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

