ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 10

படம் எடுத்து ஆடும் பாம்பினை

Updated On :15 ஏப்ரல் 2017, 5:49 am

பணம் கொள் பாற்கடல் பாம்பணையானொடும்
மணம் கமழ் மலர்த் தாமரை ஆனவன்
பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம்
கணங்கள் போற்றி இசைக்கும் கரக் கோயிலே
 

விளக்கம்

பணம் கொள் பாம்பு = படமெடுத்து ஆடும் பாம்பு. அணையான் = படுக்கையாகக் கொண்டவன். பிணங்கும் = தம்மில் மாறுபட்டபோது, பிரமனும் திருமாலும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று ஒருவொருக்கு ஒருவர் வாதம் செய்த நிலையை உணர்த்துகின்றது.

பொழிப்புரை

படம் எடுத்து ஆடும் பாம்பினைத் தனது படுக்கையாகக் கொண்டு பாற்கடலில் படுத்திருக்கும் திருமாலும் நறுமணம் கமழும் மலராகிய தாமரை மலரில் உறையும் பிரமனும், தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று கடுமையான வாதத்தினை மேற்கொண்டபோது, அவர்களின் முன்னே நீண்ட பேரழலாய் நிமிர்ந்து நின்றவன், எமது பெருமானாகிய சிவபெருமான். அவன் வீற்றிக்கும் இடம், கணங்கள் போற்றி இசைப் பாடல்கள் பாடும் கடம்பூர் கரக் கோயிலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.