ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 6

காட்டில் வளரும் முல்லை மலர்கள்

Updated On :1 மே 2017, 9:29 am

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

மல்லை = வளம் பொருந்திய. ஞாலம் = உலகம். உயிர்களுக்கு முடிவாக பெருமான் விளங்கும் நிலை இந்த பாடலில் குறிப்பிடப்படுகின்றது. முடிவாக இருக்கும் பெருமான் முதலாகவும் இருக்கும் நிலையும் முடிவினை குறிப்பிட்டதன் மூலம் உணர்த்தப்படுகின்றது என்று நாம் கொள்ள வேண்டும். முடிவு என்று குறிப்பிட்டு, அனைத்து உயிர்களும் சென்று சேர விரும்பும் முக்தி நிலையாக விளங்கும் பெருமான் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

பொழிப்புரை

வளம் பொருந்திய இந்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களும் சென்றடைய விரும்பும் முடிவான முக்தி நிலையாக உள்ள பிரான் உறையும் இடம் யாதெனில், காட்டில் வளரும் முல்லை மலர்கள், நிலவளத்தால் பெரிதாக வளரும் மல்லிகை மலர்கள் போன்ற நல்ல நறுமணம் உடைய மலர்கள் சேரும் தலமாகிய கடம்பூர் நகரத்தில் உள்ள கரக்கோயிலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.