ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

72. பாசம் ஒன்றிலராயினும் - பாடல் 2

விதித்துள்ள வழிமுறை

Updated On :6 ஜனவரி 2018, 9:32 am

பாடல் 2:
    மறையின் நாண்மலர் கொண்டு அடி வானவர்
    முறையினால் முனிகள் வழிபாடு செய்
    இறைவன் ஈசன் எம் பெருமான் இடை மருதினில்
    உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே

  
விளக்கம்:
மறையின்=மறைகளில் விதித்துள்ள வழிமுறையின் வழியே; உள்குதல்=நினைத்தல்; ஈசன்= தலைவன்;
 
பொழிப்புரை:
மறைகளில் சொல்லப்பட்டுள்ள முறையின் வழியே, தேவர்களும் முனிவர்களும் அன்று அலர்ந்த மலர்களை, இறைவனின் மீது தூவி வழிபாடு செய்கின்றார்கள். அவ்வாறு கொண்டாடப்படும் இறைவனை, எனது பெருமானை, எல்லோர்க்கும் தலைவனாக விளங்குபவனை, இடைமருது தலத்தில் உறையும் இறைவனை, எனது உள்ளம் எப்போதும் நினைக்கும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.