முற்றா மதிச் சடையார் மூவரானார் மூவுலகும் ஏத்தும்
முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார்
காம்பேய்த் தோளி
பற்றாகும் பாகத்தார் பால் வெண்ணீற்றார் பான்மையால்
ஊழி உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
பந்தணைநல்லூராரே
விளக்கம்
தலத்து இறைவியின் திருநாமம் காம்பன தோளி அம்மை என்பதாகும். இந்த பெயரினை சற்றே மாற்றி காம்பேய்த் தோளி என்று அப்பர் பிரான் அழைக்கின்றார். காம்பு = மூங்கில். அம்பிகையின் திருநாமம் வேணுபுஜாம்பிகை என்று வடமொழியில் அழைக்கப் படுவதை, காம்பேய்த் தோளி என்று மிகவும் அழகாக அப்பர் பிரான் தமிழாக்கம் செய்துள்ளார். முற்றா மதி=பிள்ளை மதி என்றும் இளமதியம் என்றும் பல இடங்களில் குறிப்பிடப்படும் பிறைச் சந்திரனை, பிறை தேய்ந்து இருந்த நிலையினை முற்றா மதி என்று கூறுகின்றார்.
மூவராக, பிரமன், திருமால், உருத்திரனாக பெருமான் இருக்கும் நிலையும், அந்த மூவருக்கும் முதல்வராக இருக்கும் நிலையும் இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். செம்பொன்பள்ளி தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் ஒரு பாடலில் (5.36.5) அப்பர் பிரான் மூவராய் முதலாய் நின்ற மூர்த்தி என்று கூறுகின்றார். ஏ = அம்பு, அம்பு ஏதும் இன்றி, தனது சிரிப்பினால் திருபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்த செய்தி இங்கே கூறப்படுகின்றது.
பூ உலாம் சடை மேல் புனல் சூடினான்
ஏ அலால் எயில் மூன்று எரித்தவன்
தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்
மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே
முதுகுன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (1.53) முதல் பாடலில் சம்பந்தர் இறைவனை மூவராய முதலொருவன் என்று கூறுகின்றார். மூவராக மட்டுமல்ல, தேவராகவும், அசுரராகவும், மறைகள் ஓதும் அந்தணர் உள்ளிட்ட அனைத்து வகை மாந்தர்களாகவும், ஐந்து பூதங்களாகவும் இருப்பவன் சிவபெருமான் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார்.
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறை சேர்
நாவராயும் நண்ணு பாரும் விண் எரிகால் நீரும்
மேவராய விரை மலரோன் செங்கண் மால் ஈசன் என்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முதுகுன்றே
பொழிப்புரை
இளம்பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக்கொண்ட பெருமான், பிரமன் திருமால் மற்றும் உருத்திரன் ஆகிய மூவராகவும் இருந்ததும் அன்றி, அந்த மூவர்க்கும் முதல்வராகவும் திகழ்கின்றார்.
கற்றவர்கள் புகழ்ந்து ஏத்தும் கடவுளாகத் திகழும் பெருமான் பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், கங்கையும் திங்களும் விரும்புவராகவும் உள்ளார். மூங்கில் போன்று அழகிய தோள்களை உடைய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் உடைய பெருமான், பால்போன்று வெண்மை நிறத்தில் உள்ள திருநீற்றினை உடலெங்கும் பூசியவர் ஆவார். தனது தன்மையால், உலகங்களை ஆக்குபவராகவும், காப்பவராகவும், அழிப்பவராகவும் விளங்கும் பெருமான், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

எட்டயபுரம் அருகே விபத்து சென்னையைச் சோ்ந்த நால்வா் உயிரிழப்பு; இருவா் காயம்

தமிழகத்தில் நாளை முதல் மீன் பிடிக்கத் தடை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

