மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

61. கடலகம் ஏழினோடும் - பாடல் 6

மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை

Updated On :5 ஜூன் 2017, 10:01 am

வன்னி வாளரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருள் பயனுமாகிக்
கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே
 

விளக்கம்

வாளரவு = ஒளி பொருந்திய பாம்பு. வன்னி = வன்னி இலை. மத்தம் = ஊமத்தம் பூ.

பொழிப்புரை

வன்னி இலை, ஒளி வீசும் பாம்பு, ஊமத்தை பூ, பிறைச் சந்திரன், கங்கை ஆறு ஆகிய பொருட்களைத் தனது தலையில் சூடிய சிவபெருமான், மின்னல் போன்று ஒளி வீசும் வடிவினனாக உள்ளான்.

அவன்தான், மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை உணர்ந்த அடியார்கள் பெறுகின்ற பயனாம் வீடுபேறாக உள்ளவன் ஆவான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்ட பெருமான், தன்னை தியானிக்கும் அடியார்களின் சிந்தனையாக விளங்குகின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை அடியார்கள் இன்னிசையுடன் இசைத்து புகழ்ந்து பாடல்கள் பாடும் வண்ணம், ஆப்பாடி தலத்தில் அவன் உறைகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.