ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

61. கடலகம் ஏழினோடும் - பாடல் 6

மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை

Updated On :5 ஜூன் 2017, 10:01 am

வன்னி வாளரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருள் பயனுமாகிக்
கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே
 

விளக்கம்

வாளரவு = ஒளி பொருந்திய பாம்பு. வன்னி = வன்னி இலை. மத்தம் = ஊமத்தம் பூ.

பொழிப்புரை

வன்னி இலை, ஒளி வீசும் பாம்பு, ஊமத்தை பூ, பிறைச் சந்திரன், கங்கை ஆறு ஆகிய பொருட்களைத் தனது தலையில் சூடிய சிவபெருமான், மின்னல் போன்று ஒளி வீசும் வடிவினனாக உள்ளான்.

அவன்தான், மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை உணர்ந்த அடியார்கள் பெறுகின்ற பயனாம் வீடுபேறாக உள்ளவன் ஆவான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்ட பெருமான், தன்னை தியானிக்கும் அடியார்களின் சிந்தனையாக விளங்குகின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை அடியார்கள் இன்னிசையுடன் இசைத்து புகழ்ந்து பாடல்கள் பாடும் வண்ணம், ஆப்பாடி தலத்தில் அவன் உறைகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.