வன்னி வாளரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருள் பயனுமாகிக்
கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே
விளக்கம்
வாளரவு = ஒளி பொருந்திய பாம்பு. வன்னி = வன்னி இலை. மத்தம் = ஊமத்தம் பூ.
பொழிப்புரை
வன்னி இலை, ஒளி வீசும் பாம்பு, ஊமத்தை பூ, பிறைச் சந்திரன், கங்கை ஆறு ஆகிய பொருட்களைத் தனது தலையில் சூடிய சிவபெருமான், மின்னல் போன்று ஒளி வீசும் வடிவினனாக உள்ளான்.
அவன்தான், மெய்ப்பொருளின் உண்மையான நிலையினை உணர்ந்த அடியார்கள் பெறுகின்ற பயனாம் வீடுபேறாக உள்ளவன் ஆவான். உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக கொண்ட பெருமான், தன்னை தியானிக்கும் அடியார்களின் சிந்தனையாக விளங்குகின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானை அடியார்கள் இன்னிசையுடன் இசைத்து புகழ்ந்து பாடல்கள் பாடும் வண்ணம், ஆப்பாடி தலத்தில் அவன் உறைகின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

