மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

62. தங்கலப்பிய தக்கன் - பாடல் 6

நிலையான புகழினை உடைய மங்கலக்குடி

Updated On :14 ஜூன் 2017, 11:07 am

மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன் பெயர் 
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நன்னெறி தொடர்வு எய்தவே
 

விளக்கம்

உன்னுதல் = மனத்தால் நினைத்தால். உரைத்தல் = வாயினால் இறைவன் புகழ் உணர்த்தும் பாடல்களை பாடுதல். துன்னுதல் = நெருங்குதல், இறைவனின் சன்னதியை நெருங்கி, சன்னதியை வலம் வந்து, நமது உடல் தரையில் படுமாறு கீழே விழுந்து வணங்குதல். இவ்வாறு மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினால் செய்யப்படும் வழிபாடு இந்த பதிகத்தில் உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு வழிபடும் அடியார்கள் நன்னெறியாகிய சிவநெறியில் ஈடுபடுவார்கள் என்பதும் இங்கே கூறப்படுகின்றது.

பொழிப்புரை

நிலையான புகழினை உடைய மங்கலக்குடி தலத்தில் பொருந்தி உறைகின்றவனும், அழகாக பின்னப்பட்ட சடையுடன் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானின் நாமங்களை தங்களது மனதினில் நினைத்து, அவனது புகழினை உணர்த்தும் பாடல்களை இன்னிசையுடன் இசைத்துப் பாடி, அவனது சன்னதியை நெருங்கி வலம் வந்து வணங்கி வழிபடும் அடியார்கள் நன்னெறியாகிய சிவநெறியில் ஈடுபடுவார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.