கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

என். வெங்கடேஸ்வரன்

பாடல்: 4

    இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்கும்
                                           தேவனாம் என்னுளானாம்
    அரவனாம் அல்லல் அறுப்பானுமாம் ஆகாச
                                          மூர்த்தியாம் ஆனேறு ஏறும்
    குரவனாம் கூற்றை உதைத்தான் தானாம் கூறாத
                                          வஞ்சக் குயலர்க்கு என்றும்
    கரவனாம் காட்சிக்கு எளியனுமாம் கண்ணாம்
                                          கருகாவூர் எந்தை தானே

விளக்கம்:

இரவன்=இரவுப் பொழுதாக இருப்பவன்; எல்லி=இருண்ட நேரம், ஊழிக் காலம் என்று இங்கே பொருள் கொள்ளவேண்டும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்று மணிவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.; அரவன்=பாம்பினை அணிந்தவன். குயலர்=தேர்ந்தவர்; 

முதல் மூன்று பாடல்களில், தனது சொல்லாகவும், கருத்தாகவும், தன்னைக் காப்பவனகவும் இருக்கும் இறைவன் என்று குறிப்பிடும் அப்பர் பிரான், மற்ற அடியார்களுக்கும் சிவபிரான் எளியவனாக இருப்பன் என்று கூறி, நம்மையும் அவன் வழிப்படுத்தும் பாங்கு உணரத்தக்கது.
 
பொழிப்புரை:

அடியார்களுக்கு மிகவும் எளியனாக காட்சி தரும் சிவபெருமான், இரவுமாகவும் பகலுமாகவும் உள்ளவன்: ஊழிக்காலத்து இருளிலும் தொடர்ந்து நடனம் ஆடுபவன்; எட்டு திசைகளுக்கும் தேவனாக விளங்குபவன்; எனது நெஞ்சத்தின் உள்ளே குடிகொண்டு இருப்பவன்; பாம்பினை அணிகலனாகக் கொண்டவன்; அடியார்களின் துயரங்களைத் துடைப்பவன்; ஆகாயத்தை வடிவமாகக் கொண்டு எங்கும் நிறைந்து இருப்பவன்; காளையை வாகனமாகக் கொண்டவன்; அனைவருக்கும் குருவாக விளங்குபவன்; கூற்றுவனை உதைத்தவன்; வஞ்சகத்தில் தேர்ந்தவர்க்கும், தன்னைப் புகழாதவர்க்கும் வெளிப்படாமல், மறைபொருளாக இருப்பவன்; இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சிவபெருமான் அவனது  அடியார்களுக்கு மிகவும் எளியவனாக இருந்து கண் போன்று அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.