மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

77. அட்டுமின் இல்பலி - பாடல் 4

கனவில் கண்டேன்

News image
Updated On :22 அக்டோபர் 2017, 6:30 pm

பாடல் 4:

செஞ்சுடர் சோதிப் பவளத் திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான்
                                                                                      ஒரு கால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு
                                                                                      அவன் தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே

விளக்கம்:

துஞ்சிடை=தூக்கத்தின் இடையே, கனவில்

அல்லும் பகலும் சிவபிரானைப் பற்றிய நினைவுகளுடனும் கற்பனைகளுடனும் காலத்தைக் கழித்த அப்பர் நாயகியின் கனவிலும் சிவபிரான் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை. அத்தகைய கனவினைக் குறிக்கும் பாடல் இது. சிவபிரானின் மேனி நிறம் சிவப்பு என்பதால் பவளத் திரள் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அவரது கழுத்தில் விளங்கும் நீல நிறம், பவளத் திரளில் முத்து பதித்தது போன்று காணப்படுகின்றது என்று இங்கே அழகாக அப்பர் பிரான் கூறுகின்றார். 

பொழிப்புரை:

சிவந்த சூரியன் போன்று ஒளியுடைவனாய், பவளத் திரளில் விளங்கும் முத்து போன்று கருநீல நிறம் அவனது கழுத்தில் இருக்கும் விடம் உண்டதால் ஏற்பட்ட கறை விளங்கத் தோன்றும் சிவபெருமான் அழகாக காணப்படுகின்றான். இவ்வாறு அழகுடன் நல்லூரில் உறையும் சிவபெருமானை, நான் எனது கனவில் கண்டேன். கண்ட அவனை நான் தொழுதேன்; எனது தொழுகையை ஏற்றுக் கொண்ட அவன் எனது நெஞ்சினில் புகுந்து விட்டான்; புகுந்த பின்னர் அவன் அங்கே அகலாது இடம் பெற்று நிற்கின்றான்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.